Header Ads Widget

<

தீபாவளிக்கு பரிசு பொருள்கள் ரேஷன் கடைகளில் வெளியான மகிழ்ச்சி செய்தி


 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு பொருள்கள் என்னென்ன கிடைக்கும் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகள் மூலமாக, தமிழ்நாடு அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, வெல்லம், முந்திரி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் ரொக்கப் பணம் சேர்த்து வழங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை போன்று தீபாவளி பண்டிகைக்கும் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அனைத்துப் பகுதி மக்களாலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால், விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக அமைவதற்கு மாறாக திண்டாடும் தீபாவளியாக மாறிவிடும் சூழல் இருக்கிறது.

தொழிலாளர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறு-குறு விவசாயிகளும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு நாடு முழுவதும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் சுமார் ஏழு கோடி பேர்களை உள்ளடக்கிய 2.25 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளே ஆதாரமாக இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தீபாவளியை எதிர்கொள்வதற்கும் ரேஷன் கடைகள் வழியாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான பொருட்களை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.எனவே அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில்  கோடி மக்கள் பயன் அடைய முடியும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில், இந்த மாதம் அமைச்சரவை கூட்டத்தில் தீபாவளி தொகுப்பாக மைதா, ரவை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தீபாவளி தொகுப்பு தொடர்பாக உணவு பொருட்கள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப அட்டைதாரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.