Header Ads Widget

<

பள்ளிகள் திறப்பு 2023 மீண்டும் ஒத்திவைப்பு வெளியான அறிவிப்பு | PALLIGAL THIRAPPU EPOTHU 2023 TAMILNADU SCHOOL REOPEN LATEST NEWS


தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதியும், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள், ஆசிரிய சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து வகுப்பு பள்ளிகளும் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். ஆனால் சென்னையில் ஒரு சில தனியார் பள்ளிகளில் இன்று பள்ளிகளை திறந்து மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் அந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் அதையும் மீறி ஒரு சில தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு  அறிவித்த தேதிக்கு முன்னர் தனியார் பள்ளிகள் திறந்தால், அந்த பள்ளிகள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் அதுவும் 10ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தி அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பிறகும், பல இடங்களில் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியதால் சூழிநிலையில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பை ஏற்கனவே அதாவது ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் இன்னும் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீண்டும் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு தேதி அதிரடி மாற்றம் மாணவர்கள் மகிழ்ச்சி