Header Ads Widget

<

22 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - TAMILNADU RAIN SCHOOL COLLEGE HOLIDAY NEWS TODAY 2022



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி நவம்பர் 3ம் தேதி  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 4ம் தேதி கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் வருகிற நவம்பர் 6ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன்  காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் தொடர் கனமழை நவம்பர் 2ம் தேதி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர் கனமழையால் நாளை (நவம்பர் 3) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கனமழையின் தீவிரத்தை பொறுத்து மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.