Header Ads Widget

<

சனிப்பெயர்ச்சி பலன் 2023 மேஷ ராசிக்கு வரும் கோடீஸ்வர யோகம் - SANI PEYARCHI MESHA RASI PALANGAL 2022



மேஷ ராசி : (MESHA RASI) மேஷ ராசி அன்பர்களே இந்த சனிப்பெயர்ச்சியில்  உங்களுக்கு சனிபகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பணவரவுகள் தேடி வரும். இந்த சனிப்பெயர்ச்சி லாபத்தையும், உயர்வையும் தரப்போகிறது. உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் உண்டு. நினைத்த வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல யோகம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரி பதவி தேடி வரும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பொறியியல் மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல யோகம் உண்டு. சனிபகவானின் பார்வை ஐந்தாவது வீடான சிம்ம ராசியின் மீது விழுகிறது இதனால் தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் விரைவாக நடைபெறும். திருமண தடைகள் நீங்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியின் பார்வை விழுகிறது. பிள்ளைகளால் சுபச் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

கோடீஸ்வர யோகம் : சனிபகவானின் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல்  கைகூடும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. சிலருக்கு அயல் நாட்டு  வருமானம்  அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து கோடிகளை தரப்போகிறார். திடீர் பணவரவுகள் திக்கு முக்காட வைக்கும். அதே நேரத்தில் அதிக பணம் வருகிறதே என்று அதிகமாக ஆவணம் கொள்ள கூடாது. சேமித்து வையுங்கள்.தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் நகை, ஆபரணம் வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. 

கவனம் : பிறருக்கு கொடுக்கல் வாங்கலில் ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. பங்கு சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சின்ன சின்ன உடல் உபாதைகள் வந்து போகும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தும்.

பரிகாரங்கள் : சனிக்கிழமைகளில் ஏழைகள், உடல் ஊனமுட்டோர்களுக்கு அன்னதானம் செய்யவும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விநாயகர், ஆஞ்சநேயரை வணங்க நல்ல பலன்கள் கிடைக்கும்.