Header Ads Widget

<

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு? வெளியான தகவல் - TAMILNADU LOCKDOWN LATEST NEWS 2022

நாடு முழுவதும் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கொரோனா பரவலின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கை காரணமாக தொற்றுப் பரவல் குறைய தொடங்கியது. இந்தியாவில் கொரோனா பரவலின் 3வது அலை குறைய தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. மேலும் கடந்த மார்ச் 31ம் தேதி அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். 

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 4வது அலையின் தாக்கம் ஜூன் மாதத்தில் பரவ தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் தொற்றின் திரிபான XE வைரஸ் தொற்றும் மற்றும் பிஏ2 வைரஸ் தொற்றும் இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. தமிழகம் உள்பட டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கேரளா, ஹரியானா, பஞ்சாப், குஜராத், கர்நாடக, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே கொரோனா 4வது அலை பரவ தொடந்துவிட்டதா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகம், பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முகக்கவசம் கட்டயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கடந்த ஒரு வார காலமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்களுக்கு தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட 200ஐ நெருங்கிவிட்டது. மேலும் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்காக அனைத்து மருத்துவமனைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே  தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு, கடைகளுக்கான நேர கட்டுப்பாடு, பொது போக்குவரத்திற்கு நேரக்கட்டுப்பாடு. பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டம் கூடத் தடை போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழக ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை மக்கள் மகிழ்ச்சி