தமிழகத்தில் கொரோனா 3ம் அலை காரணமாகவும் ஓமைக்ரான் பரவலை தொடர்ந்து தமிழக அரசு வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதனால் ஊரடகில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. கடந்த 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு வருகிற பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்காக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது என்று பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியபட்டுள்ள புதிய வைரஸான நியாகோவ் மற்றும் ஓமைக்ரான் புதிய திரிப்பான பிஏ 2 வைரஸ் தொற்றும் கணடறியப்பட்டு உள்ளது. இந்த இரண்டு வைரஸ் தொற்றுகளும் அபாயகரமானது என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு ஏற்றம் இறுக்கமாகவே உள்ளது. அடுத்த இரண்டு வாரம் மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலில் வாக்குகளை சேகரிக்க தீவிர பிரசாரம் மற்றும் கட்சி சார்பாக கூட்டம் கூடுவர். இதில் கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் சூழல் உருவாகிவிடும். இதனால் கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொது போக்குவரத்திற்கு தடை, கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி கல்லூரி விடுமுறை போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை