Header Ads Widget

<

தமிழகத்தில் மீண்டும் மார்ச் 1 முதல் முழு ஊரடங்கு பரபரப்பு தகவல் - TAMILNADU LOCKDOWN LATEST NEWS TODAY 2022

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 3வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன, அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டன. மேலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக அரசு தளர்வுகளை அளித்துள்ளதாகவும், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில், தென்னாபிரிக்கா நாட்டில் நியோகோவ் என்ற புதிய வைரஸ் தொற்றும், ஓமிக்ரான் வைரஸ் தொற்றின் புதிய திரிபான  பிஏ 2 வைரஸ் தொற்றும், மேலும் பிரிட்டன் நாட்டில் புதிய வகை கொரோனா தொற்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் தொற்று மக்களிடையே வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், மிகவும் அபாயகரமானது என்றும் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்புக்காக அரசியல் கூட்டங்கள், பிரச்சாரங்கள் போன்றவை நடத்தியுள்ளனர். இதில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்ற படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களும் வெளியில் செல்லும் பொது முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றமால் மெத்தனமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக  கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், மேலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு, பேருந்து போக்குவரத்தில் புதிய மாற்றம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, பொது கூட்டங்களுக்கு தடை போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழக ரேஷன் அட்டைகளுக்கு மார்ச் முதல் 10 முக்கிய அறிவிப்பு