நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சமையல் சிலிண்டர்களுக்கு மானிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கிட்டத்தட்ட ரூ.1000 நெருங்கிவிட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமரத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் டீலர்கள் சிலிண்டர் விநியோகம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலினை செய்த மத்திய அரசு தற்போது இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விற்பனைக்கு வரவுள்ளது. தமிழகத்திலும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதால் குடும்ப அட்டைதாரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.