தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் 2ம் அலை காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்வை மிகவும் பாதிக்கப்பட்டது. தமிழக அரசின் தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக தொற்றுப்பரவல் படிப்படியாக குறைந்து இயல்புநிலை நிலை திரும்பியது. இந்த நிலையில் தமிழகத்தில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2000 நெருங்கிவிட்ட நிலையில், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவைத்துள்ளார். மாநில அளவில் தினசரி பாதிப்பு ஒப்பிடும் போது சென்னையில் 50% அளவிற்கு பதிவாகியுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் அலட்சியமாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமல் சுற்றி வருகின்றனர். மேலும் ஒரு சில பேருக்கு அறிகுறி இல்லாமலே வெளியில் சுற்றுகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தயக்கமின்றி அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இன்னும் இரண்டு வாரத்திற்குள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15000 நெருங்கும் என்றும், தினசரி பாதிப்பு 5000 தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.